இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிமூலம் உடனடியாக வெளியே வந்து பார்த்துபோது காரின் பின்பக்க டயர்கள், டிக்கி உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது. இதுபற்றி ஆதிமூலம் கொடுத்த தகவல்படி, வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்துள்ள புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.