திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் ஓணம் பண்டிகை


திசையன்விளை: திசையன்விளை வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். இயக்குநர் சவுமியா குத்துவிளக்கு ஏற்றினார். முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக பூக்கோலமிட்டு இறைவனுக்கு படையலிட்டனர்.

தொடர்ந்து கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். மாணவர்கள் விழா கொண்டாடுவதற்கான காரணத்தை குறுநாடகம் மூலம் வெளிப்படுத்தினர்.தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடந்தது.

Related posts

வரலாறு காணாத வறட்சியால் ஜிம்பாப்வேயில் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை