சென்னை: வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். பேரவையில் பேசிய முதலமைச்சர், கருணாநிதியை சொந்த சகோதரர் போல நினைத்தவர் வி.பி.சிங். தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார். தமிழகத்தை தமது சொந்த ரத்த சொந்தங்கள் இடமாக நினைத்தார். வாழ்வதை காட்டிலும் மரணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது எனக்கூறி பிரதமர் பதவியிலிருந்து விலகியவர் என்று குறிப்பிட்டார்.