இது தொடர்பாக, தங்களை நேரில் சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத் குமார் சர்மா, ஜெயராம் ரமேஷ்க்கு எழுதியுள்ள பதிலில், வாக்காளர் ஒப்புகை சீட்டுகள் தொடர்பாக எந்தவித நியாயமான சந்தேகங்களை எழுப்பவில்லை. தேர்தல்களில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் தேர்தல் ஆணையத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது. 1961 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள், 49 ஏ மற்றும் 49 எம் பிரிவுகளின்படி, வாக்காளர் ஒப்புகை சீட்டு நடைமுறை கடந்த 2013ல் காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.உங்கள் கடிதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பவில்லை.மேலும், புதிய ஆதாரங்கள் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், நாங்கள் புதிதாக விளக்கமளிக்க ஒன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.