தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தி கரையேறுபவர்களும் உண்டு; மூழ்குபவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம், மக்களே இறுதி எஜமானார்கள். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுடைய வாக்குகளில் யாரும் கை வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.