இதன் மூலம் எந்த வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் மீறப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனுதாரர் படித்து பார்க்கவில்லை. அதை படித்திருந்தால் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருக்க மாட்டார். எந்த வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்கு செலுத்தினார் என்பதை வாக்குச் சாவடி தலைமை அதிகாரியால் அறிய முடியாது. ஏப்ரல் 26ம் தேதி தீர்ப்பின்படி செல்லுங்கள்” என்று தெரிவித்தனர். தொடர்ந்து “வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக தொடரப்பட்ட மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.