ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 18ம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குகளை பெற வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டு முறை வீட்டுக்கு வருவார்கள். இரண்டு முறையும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரில் வாக்களிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு