குமரி: விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்து வருகிறார். விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 11.40 மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.