இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமைதான். அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும். திடீரென சாலையில் அமர்ந்து ஒருவரும் போராட முடியாது. காவல்துறையில் அனுமதி பெற வேண்டும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அவற்றை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம். ஒருவேளை சட்டப்படி நடத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும். மனுதாரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையை அணுக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.