வங்கதேசத்தில் நடந்த அரசியல் நிலைமை குறித்தும் விவாதித்தோம். மேலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, இயல்புநிலையை மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி தனது சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்து விவாதித்தார். ‘குவாட்’ உட்பட பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையானது, இரு நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை செய்வதே நோக்கமாக உள்ளது என்பதை பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் அடிக்கோடிட்டு உரையாற்றினர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.