பார்வையிழந்த 13 பேரும் வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் அவர்களின் பார்வையை முழுமையாக மீட்டெடுக்க முடியுமா? என்பது கேள்வியாக உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 11 பேரும் ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனைக்காக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே முதியோர்களை பராமரித்து வந்த தனியார் முதியோர் இல்லத்திற்கு அங்கூல் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் அப்தால் எம்.அக்தர் உத்தரவிட்டுள்ளார்.