விசிக மாநாட்டில் பங்கேற்பா? எடப்பாடி பழனிசாமி பதில்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள், அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்து கொள்வோம். அவர்களுடன் சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியை கொடுக்கும்’ என்றார்.

Related posts

திருப்பதியில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிப்பு: தேவஸ்தான செயல் அலுவலர் ஒப்புதல்!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!