பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள், அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்து கொள்வோம். அவர்களுடன் சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியை கொடுக்கும்’ என்றார்.