பின்னர் வாகனத்தை இறக்கும் போது கணக்கெடுப்பின் போது காவல் நிலையத்தில் இருந்த வாகனங்களை விட மைதானத்தில் இறக்கி வைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், காவல் நிலைய போலீசரிடம் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் இருந்த இருசக்கர வாகனங்களை முறைப்படி அப்புறப்படுத்த இணை ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில் காவல் நிலையத்திற்கு தெரியாமல் 4 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கியர் சைக்கிள் ஆகியவை சரக்கு ஆட்டோ மூலம் திருடி சென்ற மூன்று காவலர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியிட்டது. மேலும் உயர் அதிகாரிகள் விசாரணையில் காவல் நிலைய எழுத்தர் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூவரையும் பணியிட நீக்கம் செய்து கோயம்பேடு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.