இதன் காரணமாக, கழிவுநீர் சீராக செல்லாமல், முதல் தொட்டி வழியாக தொடர்ந்து கழிவுகள் வெளியேறி வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதமாக கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. பள்ளி குழந்தைகள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தோம். நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆய்வு செய்தனர்.
கழிவுநீர் குழாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். ஆனால் 3 மாத காலமாகியும் நடவடிக்கை இல்லை. தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இரண்டு மேனுவலுக்கு இடையில் உள்ள குழாய் உடைந்துள்ளது. இதை சாலையை தோண்டி பழுதுநீக்க வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் உடனடியாக செய்ய இயலவில்லை. விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.