இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், விருதுநகரில் நேற்றைய தினம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு விஜயபிரபாகரன் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர்; சூழ்ச்சி, துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டதால் கோபமும், ஆதங்கமும் தங்களுக்குள் உள்ளது என்றார். மேலும், தன்னுடைய தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் என்றவர் தன்னுடைய தோல்வியை 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சரமாக பார்ப்பதாக கூறினார்.