விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த வீரக்குமார், காளிராஜ் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.