தற்போது தண்ணீர் வரத்து இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து, தற்போது 6.50 அடியாக உள்ளது. இதனால் சென்னை குடிநீருக்கு கடந்த 1ம் தேதி முதல் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. வழக்கமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை அனுப்பப்படும் குடிநீர் நிறுத்தப்படும். ஆனால் நடப்பாண்டில் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.