இந்நிலையில், இம்பாலில் ஆளில்லாமல் இருந்த 2 வீடுகளுக்கு வன்முறை கும்பல் நேற்று அதிகாலை தீ வைத்தது. லாங்கோல் மண்டல தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ராணுவத்தினர் பணி முடிந்து வெளியேறி, சிஆர்பிஎப் வீரர்கள் உள்நுழையும் இடைவெளியை பயன்படுத்தி வன்முறை கும்பல் இந்த வீடுகளுக்கு தீ வைத்துள்ளது. இதையடுத்து, இம்பாலில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், “மணிப்பூரில் நிலைமை இன்னும் கொந்தளிப்பு, பதற்றம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் கலவரம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்,’’ என்று கூறப்பட்டுள்ளது.