சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் பயனில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரியில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா பேட்டி அளித்துள்ளார்.