இந்த நிலையில் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சாதனையாளருக்கான பரிசுத்தொகை வினேஷ் போகத்திற்கு வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.