பாரீஸ் : இந்திய வீராங்களை வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று விளையாட்டு போட்டிகளுக்கான சர்வதேச தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. வினேஷ் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாட உள்ளார். விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்ற நீதிபதியாக அனபெல் பௌட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.