விழுப்புரத்தில் சிறுமியை கொன்று புதைத்த வழக்கில் 2 பேர் கைது..!!

விழுப்புரம்: கஞ்சனூர் அருகே 17 வயது சிறுமியை கொன்று புதைத்த காதலன் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் அகிலன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும், காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகி வந்ததால், அந்த 17 வயது சிறுமி, கர்ப்பம் அடைந்தார்.

இதை அறிந்த அகிலன் தனது நண்பர் உதவியுடன் தனது காதலியை கொலை செய்து உடலை புதைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அகிலனை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை கொன்று புதைத்த காதலன் அகிலன் சென்னையில் கைது செய்யப்பட்டார். சிறுமி கொலை வழக்கில் கக்கனூரை சேர்ந்த சுரேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அகிலனை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி

ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்: மாயாவதி!