இதை அறிந்த அகிலன் தனது நண்பர் உதவியுடன் தனது காதலியை கொலை செய்து உடலை புதைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அகிலனை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை கொன்று புதைத்த காதலன் அகிலன் சென்னையில் கைது செய்யப்பட்டார். சிறுமி கொலை வழக்கில் கக்கனூரை சேர்ந்த சுரேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அகிலனை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.