சென்னை: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மலுமச்சம்பட்டி, சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நிதி முறைகேடு புகாருக்காக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது எனவும் சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிதாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ள சூழல் இருக்க வேண்டும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.