நள்ளிரவு 12 மணி வரை கூட்டம் தொடர்ந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரசேகரன்(58) என்பவர், கடந்த ஆண்டு திருவிழாவை சரிவர நடத்தவில்லை? ஏன் என்று முன்னாள் நாட்டாமை விஜயராகவனிடம் (31) கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயராகவன், சந்திரசேகரனை நெஞ்சில் காலால் எட்டி உதைத்தார். இதில் நிலை குலைந்த சந்திரசேகரன் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் சந்திரசேகரனை எழுப்பிய போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.