மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு கிராம தன்னார்வலர் பலி

இம்பால்: மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குண்டு பாய்ந்து கிராம தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூரின் காங்போய் மாவட்டத்தில் உள்ள சதாங் குகி கிராமம் அருகே ஆயுதமேந்திய கும்பல் நுழைந்தது. மற்றொரு குழுவும் அங்கு வந்ததால் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து கிராம தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.இதனிடையே தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு