சில நாள் கழித்து ஸ்ரீசாந்த் என்னை தொடர்பு கொண்டு, தான் அமைக்க உள்ள விளையாட்டு அகாடமியில் என்னை பங்குதாரராக சேர்ப்பதாக கூறினார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எனக்கு பணத்தை திருப்பித் தரவோ, என்னை பங்குதாரராக சேர்க்கவோ இல்லை இவ்வாறு அந்தப் புகாரில் பாலகோபால் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கண்ணூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் ராஜீவ்குமார், வெங்கடேஷ் ஆகியோர் மீது கண்ணூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.