இந்த நிலையில், கனிமொழிக்கு விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அடங்குணம் கிராமத்தில் தான் வாக்கு உள்ளது. எனவே இன்று வாக்கு செலுத்துவதற்காக அவர் அடங்குணம் வந்தார். பின்னர் டி. கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 40ல் கனிமொழி வாக்களிக்க சென்றார் அப்போது கனிமொழியை பார்த்த ஏழுமலை என்னை தவிக்க விட்டு போய்விட்டாயே என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரத்தில் அவர் பேனாகத்தியால் கனிமொழியின் கழுத்தில் குத்தி கீறிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த கனிமொழியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்து வந்த கஞ்சனூர் போலீசார் ஏழுமலையை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை பல்வேறு கொலை வழக்குகளில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.