விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் ரவிக்குமார், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.