விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை ஆதரிக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளரை அதிமுகவினர் ஆதரிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக் கூடாது என்றும் அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலின்போது பாமகவுடன் பல்வேறு முறை அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்று பாமக அறிவித்தது. பாமகவின் முடிவால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியை ஆதரிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்