வௌியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்


புதுடெல்லி: இந்திய வௌியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வௌியுறவுத்துறை செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் வினய் மோகன் குவாத்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து 1989 பிரிவு இந்திய வௌியுறவு சேவை அதிகாரியான விக்ரம் மிஸ்ரியை இந்திய வௌியுறவுத்துறை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. விக்ரம் மிஸ்ரி தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்