சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு அருகே தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய நபர்கள், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே நல்லடக்க நிகழ்வில் அனுமதி வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.