ஏழைப் பங்காளன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது: அண்ணாமலை இரங்கல்

சென்னை: ஏழைப் பங்காளன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அன்பை முழுமையாகப் பெற்றவர் விஜயகாந்த் எனவும் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; “அற்புதமான மனிதன், ஏழைகளின் பங்காளனாக இருந்து வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் காட்டிவிட்டு அவரின் ஆன்மா இன்று ஆண்டவரின் நிழலில் இளைப்பாற சென்றுள்ளது. இந்த துக்கமான நேரத்தில் நம் கேப்டன் விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கோலூற்றி, அற்புதமான அரசியல் தலைவராக இருந்தவர். நமது பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இங்கே அனுப்பி வைத்துள்ளார். நிதியமைச்சர் இங்கு வந்து விஜயகாந்தின் குடும்பத்தினரை சந்தித்து தங்களது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி, பிரதமர் மோடி சார்பில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கேப்டனின் இரு மகன்களுக்கும், சுதீஷுக்கும், கட்சியின் எல்லா நிவாகிகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு கேப்டனின் புகழ் என்றும் ஓங்கியிருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். என்றும் உங்களோடு இருப்போம்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

Related posts

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை