சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் விஜயகாந்த். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர் விஜயகாந்த் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.