சென்னை: நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் என்று இயக்குனர் அமீர் புகழாரம் சூட்டியுள்ளார். ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர். நிஜ நாயகனாகவே வாழ்ந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறினார்.