Sunday, June 30, 2024
Home » அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த்; நடிகர் சிவகுமார் புகழாரம்!!

அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த்; நடிகர் சிவகுமார் புகழாரம்!!

by Lavanya
Published: Last Updated on

சென்னை: அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என நடிகர் சிவகுமார் புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டவர்: விஜயகாந்த்

ஒரு சிறந்த நடிகராகவும் அரசியல் தலைவராகவும் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டவர் விஜயகாந்த் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சமூகம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் விஜயகாந்தின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

பொன் மனம் கொண்டவர் விஜயகாந்த்: ரோஜா

பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது என ஆந்திர அமைச்சர் ரோஜா இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“நம்பிக்கையான தலைவராக விளங்கியவர் விஜயகாந்த்: நடிகர் சிவகுமார்

அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என நடிகர் சிவகுமார் புகழாரம் தெரிவித்துள்ளார். சாமந்திப்பூ படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்; புதுயுகம் படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது என்று நடிகர் சிவகுமார் உருக்கம் தெரிவித்தார்.

விஜயகாந்த் மறைவுக்கு நெப்போலியன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிக நாள் இருந்து திரைத்துறை, நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டிய நல்ல நடிகர், நல்ல தலைவரை இழந்துவிட்டோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் விஜயகாந்த்.

விஜயகாந்த் மறைவுக்கு அமித்ஷா இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது திரை கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபத்தியை தூண்டினார்.

விஜயகாந்த் போற்றுதலுடன் நினைவுகூரப்படுவார்: பிரியங்கா காந்தி

பொன் நெஞ்சம் கொண்ட விஜயகாந்த் போற்றுதலுடன் நினைவுகூரப்படுவார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். விஜயகாந்தை நேசித்த, நம்பிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

வள்ளலுக்கெல்லாம் வள்ளல் விஜயகாந்த்: பாரிவேந்தர்

குழந்தை மனம் படைத்த விஜயகாந்த் வள்ளலுக்கெல்லாம்
வள்ளல் என பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் மறைவால் தமிழகத்தின் அரசியல் | எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் உதவி செய்தவர்: ஜவாஹிருல்லா

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்கிற கொள்கை அடிப்படையில் உதவி செய்தவர் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் விஜயகாந்த்: ஜெ.பி.நட்டா

திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் விஜயகாந்த் என ஜெ.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

twenty + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi