அவரும் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோயிலில் இருந்த பூசாரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு முகத்தை தடவி ஆசீர்வாசம் வழங்கினார். அடுத்து நின்றிருந்த எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வுக்கும் முகத்தை தடவி கன்னத்தில் முத்தமிட்டு ஆசி வழங்கினார். அடுத்து நின்று கொண்டிருந்த விஜயதரணியின் கன்னத்தை தனது இரு கைகளாலும் அழுத்தி திருநீறு வழங்கி பூசாரி ஆசீர்வாதம் வழங்கினார். இதனை பார்த்த தொண்டர்கள் இது புதுவித ஆசீர்வாதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு கோயிலில் இருந்து தரிசனத்தை முடித்து பிரசாரத்தை தொடங்கினர்.