தேமுதிகவை பொறுத்தவரை தனித்தே களம் கண்டவர்கள். எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம். இன்று மாபெரும் கூட்டணியில் இணைந்துள்ளோம். இது வெற்றி கூட்டணியாக அமையும். அதிமுக – தேமுதிக இரண்டு பேரும் பேசி தான் தொகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது. கேட்ட தொகுதிகளை அதிமுக எங்களுக்கு தந்துள்ளனர். நல்ல புரிந்துணர்வுடன் இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. நாங்கள் அனைவருடனும் நட்புணர்வுடன் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* மாநிலங்களவை பதவி உறுதி
பிரேமலதா கூறுகையில், ‘மாநிலங்களைவ எம்பி பதவி பற்றி கேட்கிறீர்கள். அது உறுதி செய்யப்பட்டு விட்டது. வெற்றிலை, பாக்கு மாற்றி விட்டோம். தேதி மற்றும் யார் வேட்பாளர் என்பது பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.
* தேமுதிக அலுவலகத்துக்கு சென்ற எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். அவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த விஜயகாந்த் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா மற்றும் தேமுதிக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு எடப்பாடி புறப்பட்டு சென்றார்.