குடியிருப்பாளர்கள் பலர் வீட்டில் இருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 45 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். குறுகிய பாதையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலையில் இன்று காலையில் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 பேரில் 50பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.