சென்னை: பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை நடத்தினர். தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். பூட்டர் பார்க் பெயரை பின்னர் பூட்டர் பவுண்டேஷன் என்று மாற்றிவிட்டதாகவும் அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.