சென்னை: பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பதவி நீட்டிக்கப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தருக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு தந்திருப்பது தான்தோன்றித்தனமும், சட்டமீறலும், மரபு மீறலுமாகும். போட்டி ஆட்சி நடத்த முயலும் ஆளுநரின் வன்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.