விஎச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை ஜாமினில் விடக் கூடாது; போலீஸ் கடும் எதிர்ப்பு

சென்னை: விஎச்பி முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை ஜாமினில் விடக் கூடாது என போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாலும் அவரை ஜாமினில் விடக் கூடாது என போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது. செப்.11-ல் தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு