டெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு டிசம்பர்.13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனையை ரத்து செய்யக் கோரி 10க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வாச்சாத்தி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கலான அனைத்து வழக்குகளின் பட்டியலை வழங்கவும் ஆணையிடப்பட்டது.