புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் மனுவை ஏற்று அவகாசம் வழங்கிய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 304 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை 221 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.