இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான காதணிகள் உள்ளிட்ட சில பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது சுடு மண்ணாலான புகைபிடிப்பான் கருவி, சுடுமண் குழாய் ஆகியவை கிடைத்துள்ளன. தொடர் ஆய்வின் மூலம் மேலும் பல அரிய பொருட்களும் தகவல்களும் தெரிய வரக்கூடும்’’ என்றார்.