அதன் அடிப்படையில் முதலில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி இன்று காலை 2வது மண்டல சுகாதார ஆய்வாளர் லூர்துசாமி தலைமையில் தொடங்கியது. இதில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய்களின் மூடிகளை அகற்றி கால்வாயில் உள்ள கழிவுகளையும், சேற்றையும் முழுமையாக வெளியேற்றி வருகின்றனர். இவை உடனடியாக அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கழிவுநீர் அதிகம் தேங்கும் இடங்களில் மழை தீவிரமடைவதற்கு முன்னதாக அங்குள்ள கால்வாய்களை முழுமையாக தூர்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது’ என்றனர்.