இந்நிலையில், கடந்த 16ம் தேதி விக்னேஷ் ஆட்டோவில் புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பஸ் மோதியதில், படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விக்னேஷ் உடல் நேற்று சொந்த ஊரான புலிமேடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ அதிகாரிகள் விக்னேஷின் உடல் மீது தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செய்தபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.