வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடபட்ட விவகாரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கபட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். உணவக பிரச்சனையை சமுக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.