வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேகமாக வந்த கார் மோதியதில் பள்ளி மாணவன், முதியவர் உயிரிழந்தனர். சாலையோரம் நடந்தபோது வேகமாக வந்த கார் மோதியதில் முதியவர் ரங்கசாமி, பள்ளி மாணவன் ஆறுஅமுதன் பலியாகினர். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இருவரும் பலியாகினர்.