வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகொண்டா காவலர் சங்கர், ஊர்க்காவல் படை காவலர் நவீன் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த வீடியோ வைரலாகியது. இதையடுத்து காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டார்.