இவ்வாறு 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அன்னையின் அருளாசியை பெற லட்சகணக்கான பக்தர்கள் தினந்தோறும் வேளாங்கண்ணியில் திரண்டு நிற்பார்கள்.இதன்படி இந்த ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கவுள்ளாலர்கள். இதை தொடர்ந்து திருத்தலம் கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படும். பின்னர் பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர்லம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடையும். அங்கு பக்தர்கள் ஆவே மரியா, மரியே வாழ்க என்ற கோஷம் விண்ணைதொடும் அளவிற்கு எழுப்ப ஆண்டுபெருவிழா கொடியேற்றப்படும்.
இவ்வாறு மிகவும் சிறப்புடன் நடைபெறும் கொடியேற்றத்தை காண லட்சகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருகை தந்து திரண்டு நிற்பார்கள். இவ்வாறு புகழ் பெற்ற ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வர்ணம் பூசும் பணி நிறைவு பெற்றது.இதை தொடர்ந்து பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதை காண்பதற்காக தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயம் வருகின்றனர்.